அராஜக நிலை ஏற்படாமல் நாட்டை முன்னேற்றுவோம்

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர உறுதி

0 15

(எம்.வை.எம்.சியாம்)
சட்டம் சீர்­கு­லைந்­துள்ள நிலையில் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. எமது அர­சாங்­கத்தில் சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­படும். சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐய­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­குவோம். அதே­போன்று எதிர்­கா­லத்தில் எந்­த­வித அரா­ஜக நிலையும் ஏற்­ப­டாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தை நாம் முன்­னெ­டுப்போம் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

ஹப­ரா­து­வவில் நேற்று முன்­தினம் பிற்­பகல் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு உரை­யாற்­றினார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,
நாம் எதிர்­வரும் 21 ஆம் திகதி அர­சியல் பொரு­ளா­தார மற்றும் சமூக மாற்­றத்­துக்­காக தயா­ரா­க­வுள்ளோம். கடந்த காலங்­களில் நாட்டை மேம்­ப­டுத்த பல்­வேறு வழி­மு­றைகள் காணப்­பட்­டாலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்கள் இருக்­க­வில்லை.எரி­வாயு எரி­பொருள் தட்­டுப்­பாடு மற்றும் மின்­சார தடை ஏற்­பட்­டாலும் அதனை இல்­லாமல் செய்ய முடி­யாது போனது.

டொலரை முகா­மைத்­துவம் செய்ய முடி­யாமல் போனால் எமது திட்­டங்­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்­துச்­செல்ல முடி­யாமல் போகும்.எதிர்­கா­லத்தில் எந்­த­வித அரா­ஜக நிலையும் ஏற்­ப­டாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தை தேசிய மக்கள் சக்தி முன்­னெ­டுக்கும். சட்­டத்தின் ஆட்சி, அர­சியல் ஸ்திர­தன்­மையை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய மற்றும் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய அர­சாங்­கத்தை நாம் முன்­னெ­டுத்துச் செல்வோம்.

சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்த வேண்டும்.சட்டம் சீர்­கு­லைந்த ஒழுங்­கற்ற நிலையில் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. சட்­டத்தின் முன்னால் அனை­வரும் சமம் எனும் சட்­ட­வாட்­சிக்­கொள்கை நாம் கொண்டு வருவோம்.எமக்கு பல­மிக்க அர­ச­சேவை அவ­சி­ய­மாகும்.ஆனால் அர­ச­சேவை சீர்­கு­லைந்­துள்­ளது. அர­சியல் தலை­யீடு, ஊழல், அர­சியல் நிய­மனம், அர­சியல் இட­மாற்றம் என அரச கட்­ட­மைப்பு சீர்­கு­லைந்­துள்­ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.