உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்

0 16

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சமூகம் மற்றும் சமாதானத்துக்கான மையம் (CSR), ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைக்கும் பரிந்துரைகள்

பொது மக்­களின் உரி­மை­க­ளுக்­காக ஆரம்பம் முதல் தலை­யீ­டு­களை செய்து நட­வ­டிக்கை எடுத்­து­வரும் நிறு­வ­னமே சமூகம் மற்றும் சமா­தா­னத்­துக்­கான மையம் ( CSR) ஆகும். உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்­குதல் தொடர்பில் நீதியை நிலை­நாட்ட எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சமூகம் மற்றும் சமா­தா­னத்­துக்­கான மையத்தின் ஆய்வுக் குழு பரிந்­து­ரை­களை தயா­ரித்­துள்­ளது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்றி பெற்­றாலும் இப்­ப­ரிந்­து­ரை­களை அமுல் செய்­வது மிக அவ­சியம் என நாம் உறு­தி­யாக நம்­பு­கின்றோம்.
அதன்­படி, அதன் முதல் படி முறை­யாக, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் இப்­ப­ரிந்­து­ரை­களை அமுல் செய்­வ­தற்­கான இணக்­கத்தை வெளிப்­ப­டுத்­து­வது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அதன்­படி, ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் இது தொடர்பில் நியா­யத்தை நிலை­நாட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கு உள்ள அபிப்­பி­ரா­யத்தை, ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் அறி­விக்­கு­மாறு அனைத்து ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டமும் கோரு­கின்றோம்.

நாம் முன் வைக்கும் பரிந்­து­ரைகள் பின்­வ­ரு­மாறு:
01. உண்­மையை கண்­ட­றிதல், ஏற்­றுக்­கொள்ளல் மற்றும் வெளிப்­படைத் தன்மை
* உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்­குதல் தொடர்பில் உண்­மையை கண்­ட­றிய நிய­மிக்­கப்­பட்ட 03 குழு / ஆணைக் குழுக்கள் ஊடாக பல பரிந்­து­ரைகள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. நீதி­ய­ரசர் விஜித் மல­கொட தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு, நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு மற்றும் பாரா­ளு­மன்ற தெரிவுக்குழு ஆகி­ய­னவே அக்­கு­ழுக்­க­ளாகும். பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு தொடர்­பி­லான அனைத்து கோவை­களும் (சாட்சி மற்றும் இறுதி அறிக்கை) பிர­சித்தம் செய்­யப்­பட்­டுள்ள போதும், நீதி­ய­ரசர் விஜித் மலல்­கொட மற்றும் நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா தலை­மை­யி­லான குழுக்­களின் இறுதி அறிக்­கைகள் மட்­டுமே பகி­ரங்­கப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன. சாட்சிப் பதி­வுகள் உள்­ளிட்ட ஏனைய கோவைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. செனல் 4 தொலைக்­காட்­சியின் வெளிப்­ப‌­டுத்­தலின் பின்னர் அது தொடர்பில் ஆராய ஜனா­தி­பதி குழு­வொன்­றினை நிய­மித்த போதும் அதன் அறிக்கை தொடர்பில் எந்த தக­வலும் இல்லை. எனவே இந்த குழுக்கள், ஜனா­தி­பதி ஆணைக் குழுக்­க­ளுடன் தொடர்­பு­டைய அனைத்து கோவைகள், அறிக்­கை­க­ளையும் ஆர்வம் உள்ள தரப்­பி­னரின் பரி­சீ­ல­னைக்­காக பகி­ரங்­கப்­ப­டுத்தல் வேண்டும்.

* உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்­கு­தல்கள் தொடர்பில் மூன்று குழுக்கள் ஊடாக விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­ட­தாக நாம் ஏற்­க­னவே குறிப்­பிட்­டுள்ளோம். அதே போல குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் போன்ற விசா­ரணை நிறு­வ­னங்­களும் தனி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தன. விஷே­ட­மாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் சாட்­சி­யங்கள் ஊடாக வெளிப்­பட்ட சில விட­யங்கள், அதன் இறுதி அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­ப­டா­மையும், நெளபர் மெள­லவி போன்ற முக்­கிய சாட்­சி­யா­ளர்­களின் சாட்­சி­யங்­களைப் பெறா­மையும், அதன் இறுதி அறிக்கை கைய­ளிக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இது­வரை புதி­தாக வெளிப்­ப‌­டுத்­தப்­பட்ட தக­வல்கள் குறித்தும் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து உண்மை நிலையை சாட்­சி­யங்கள் ஊடாக வெளிப்­ப‌­டுத்­திக்­கொள்ளல் அவ­சி­ய­மாகும். அதன் படி பூரண அதி­காரம் மிக்க ஆணைக்குழு­வொன்று அவ­சி­ய­மா­கி­றது. இந் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சுயா­தீன ஆணைக் குழு­வொன்று நிய­மிக்­கப்­படல் வேண்டும். அந்த ஆணைக் குழு சாட்­சிகள் ஊடாக வெளிப்­ப‌­டுத்தும் விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியு­மா­ன­தாக இருத்தல் வேண்டும். அப்­போதே அது பிர­யோ­ச­ன­மா­ன­தாக அமையும். அதன்­பின்னர் குற்­ற­வியல் நீதி எனும் தலைப்பின் கீழ் பிரே­ரிக்­கப்­படும் வெளி­நாட்டு விசா­ரணை அலு­வ­லகம் ஊடாக அந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும். அவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கட்­ட­மைப்பு இல்­லை­யெனில் விசா­ரணை ஆணைக் குழு சட்­டத்தை திருத்தி பரந்த அதி­கா­ர­மு­டைய ஆணைக் குழு­வொன்­றினை நிறுவ தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க பரிந்­துரை செய்­கின்றோம். அதன்­படி பூரண அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவை நிய­மிக்­கவும், அவர்­க­ளது முதற் கட­மை­யாக தற்­போதும் ஆணைக் குழுக்­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்கும் பல்­வேறு தரப்­பி­ன­ருக்கும் வழங்­கப்­பட்­டுள்ள வாக்கு மூலங்கள், சாட்­சி­கள் அனைத்­தையும் பரி­சீ­லித்து பகுப்­பாய்வு செய்ய வேண்டும் என ஆணைக் குழு அதி­கார பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­படல் வேண்டும்.

உள்­நாட்டு வெளி­நாட்டு பக்­கச்­சார்ப்­பற்ற நீதி­ப­திகள், உள்­நாட்டு வெளி­நாட்டு விசா­ர­ணை­யா­ளர்கள் மற்றும் சட்ட வல்­லு­நர்கள் ஊடாக இந்த ஆணைக் குழுவும் அதன் விசா­ரணைப் பிரிவும் அமையப் பெறல் வேண்டும். குறித்த ஆணைக்குழு உறுப்­பி­னர்­க­ளாக வெளி­நாட்­ட­வர்­களை நிய­மிக்க சட்ட இய­லுமை இல்லை எனில் மிக குறு­கிய காலத்தில் அதற்­கான சட்டம் இயற்­றப்­பட்டு அல்­லது திருத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல் வேண்டும்.

ஆணைக் குழுவின் உறுப்­பி­னர்­களை நிய­மிக்கும் போது, இந்த தாக்­குதல் தொடர்பில் நீதியை எதிர்­பார்த்து ஆரம்பம் முதல் செயற்­படும் நிறு­வ­னங்கள், அமைப்­புக்கள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்கள் முன் வைக்கும் ஆலோ­ச­னை­க­ளையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

அந்த விசா­ரணை ஆணைக் குழுவின் வசதி கருதி தேவை­யான மற்றும் போது­மான அள‌வு ஊழி­யர்­க­ளுடன் நிதி வச­தி­களும் செய்­து­கொ­டுக்­கப்­படல் வேண்டும்.

முக்­கிய விடயம் என்­ன­வென்றால், ஆணைக் குழுவின் அனைத்து சாட்சி விசா­ர­ணை­க­ளையும் மேற்­பார்வை செய்ய உள்­நாட்டு, வெளி­நாட்டு மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அழைப்­பு­வி­டுக்­கப்­படல் வேண்டும். இந்த சாட்சி விசா­ர­ணை­களை ஊட­கங்கள் / சமூக ஊட­கங்கள் வாயி­லாக நேர­டி­யாக ஒளி­ப­ரப்ப நட­வ­டிக்கை எடுத்தல் வேண்டும். அத்­துடன் இர­க­சி­ய­மாக பதிவு செய்­யப்­படல் வேண்டும் என ஆணைக் குழு ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்கும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­களை மட்டும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாது பதிவு செய்ய முடியும்.

* உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்பில் நடை­பெறும் எந்த நட­வ­டிக்­கை­யாக இருந்­தாலும் அவை வெளிப்­படைத் தன்­மை­யுடன் நடை­பெறல் வேண்டும். அத்­துடன் அவை தொடர்பில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் ஒட்­டு­மொத்­த­மாக பொது மக்­க­ளுக்கு தெரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருத்தல் வேண்டும். அதன்­படி குறிப்­பிட்ட கால எல்­லைக்கு ஒரு­த­டவை அப்­போ­தி­ருக்கும் நிலைமை தொடர்­பி­லான தக­வல்­களை பொது மக்­க­ளுக்கு முன் வைக்க வேண்டும். அதே போல அவ்­வி­ட­யங்கள் தொடர்பில் பொது மக்­க­ளுக்கு உள்ள கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கவும் முறைமை ஒன்று உரு­வாக்­கப்­படல் வேண்டும்.

நடை­முறை நிலைமை, எடுக்­கப்­பட்­டு­வரும் நட­வ­டிக்கை தொடர்பில் படி­முறை படி­மு­றை­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் உள்­ளிட்ட பொது மக்­களை இரு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களில் எந்­த­வொரு குடி­ம­கனும் புரிந்­து­கொள்ளும் வகையில் தக­வல்கள் முன் வைக்­கப்­படல் வேண்டும். உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் தொடர்­பிலும் புதிய தக­வல்கள் அவ்­வ­றிக்­கை­களில் உள்­ள­டக்­கப்­படல் வேண்டும்.

02) நட்ட ஈடு
இந்த தாக்­குதல் தொடர்பில் நியா­யத்தை நிலை­நாட்டும் நட­வ­டிக்­கை­களில் மிக முக்­கி­ய­மான ஒன்றே நட்ட ஈடு செலுத்­தலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­து­மாகும். அவை பொரு­ளா­தார, சமூக மற்றும் உள­வியல் நிவா­ர­ணங்கள் என்ற 3 பிரி­வு­களின் கீழ் அமைதல் வேண்டும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்­கு­வ­தற்­காக இழப்­பீட்டு அலு­வ­லக சட்டம் மற்றும் அதன் கீழ் வெளி­யி­டப்­பட்­டுள்ள வழி­காட்­டல்­க­ளிலும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­யா­ளர்கள் பாது­காப்பு சட்­டத்தின் விதி­வி­தா­னங்கள் பிர­கா­ரமும் போது­மான சட்ட ஏற்­பா­டுகள் உள்­ளன. நிவா­ரணம் வழங்கும் போது, பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ருக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்கு சம­மான அவர்­க­ளது தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படல் வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிக்கும் நட­வ­டிக்­கை­களை யதார்த்­த­மாக்கும் நோக்கில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ருக்கு ஏற்­பட்ட பொரு­ளா­தார பாதிப்­பினை பகுப்­பாய்வு செய்ய விஷேட வேலைத் திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க முடியும். அத்­துடன் அத­னூ­டாக ஒவ்­வொரு குடும்பம் தொடர்­பிலும் அளிக்­கப்­பட வேண்­டிய நட்ட ஈட்டுத் தொகை நியா­ய­மா­கவும் தேவை­க­ளுக்கு ஏற்­பவும் தீர்­மா­னிக்­கப்­ப­டலாம்.

* அதே­போல உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் கார­ண­மாக பழி­வாங்­கல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் நியாயம் நிலை­நாட்­டப்­ப­டுதல் இங்கு முக்­கி­ய­மா­ன­தாகும். அதன்­படி குறித்த அதி­கா­ரிகள் எதிர்­நோக்­கிய மன அழுத்தம் தொடர்பில் அவர்­க­ளுக்கு நட்ட ஈடு செலுத்­தவும் அவர்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கவும் உரிய முறைமை ஒன்று தயார் செய்­யப்­படல் வேண்டும்.

* கடந்த காலங்­களில் அர­சியல் கார­ணி­களை அடிப்­ப­டை­யாக கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எனக் கூறி குறிப்­பி­டத்­தக்க ஒரு சாரார் கைது செய்­யப்­பட்­டனர். அவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சில­ருக்கு எதி­ராக இன்றும் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சிலர் மாதக் கணக்கில் விளக்­க­ம­றி­யலில் அல்­லது தடுப்புக் காவ­லிலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக பதி­வா­னது. உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் நீதியை நிலை­நாட்டும் நட­வ­டிக்­கை­களில் மற்­றொரு முக்­கி­ய­மான அங்கம், அத்­தாக்­கு­தலை தொடர்ந்து அர­சியல் கார­ணி­களை அடிப்­ப­டை­யாக கொண்டு கைது செய்­யப்­பட்­டோ­ருக்கு நிவா­ர­ண­ம­ளிப்­ப­தாகும். அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களை வாபஸ் பெறு­வது மற்றும் வேறு நிவா­ர­ணங்­களை வழங்க வேலைத் திட்­ட­மொன்று முன் வைக்­கப்­படல் வேண்டும்.

* அதே போல உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் பல பிர­தே­சங்­களில் தாக்­கு­தல்கள் மற்றும் வீடு­க­ளுக்கு தீ வைத்தல் போன்ற சம்­ப­வங்கள் பதி­வா­கின. அந்த சம்­ப­வங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­த­வர்­க­ளுக்கும் நட்ட ஈடு உள்­ளிட்ட நிவா­ர­ணங்கள் அளிக்­கப்­படல் வேண்டும்.

03) குற்­ற­வியல் நீதி
தற்­போ­தைய நடை­மு­றையில் சட்ட மா அதி­பரின் வகி­பாகம் பெரிதும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. அதற்கு காரணம், அரசின் சட்ட ஆலோ­ச­க­ரான சட்ட மா அதிபர், ஒரு கட்­டத்தில் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றங்­களில் ஆஜ­ரா­வ­துடன­தொரு கட்­டத்தில் அந்த பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களின் போது மேற்­பார்­வை­யா­ள­ரா­வ­தாகும். ஒரு நீதி­மன்றில் பிர­தி­வா­திக்­காக ஆஜ­ராகும் சட்ட மா அதிபர் மற்­றொரு நீதி­மன்றில் அந்த பிர­தி­வா­திக்கு எதி­ராக ஆஜ­ரா­கின்றார். சட்ட மா அதி­பரின் இந்த செயற்­பாடு முரண்­பாட்டு நிலை­மையை தோற்­று­விக்­கின்­றது. அப்­ப‌­டி­யானால் வழக்­கு­களை நெறிப்­ப­டுத்­தவும், இதற்கு முன்னர் குறிப்­பிட்ட விஷேட ஆணைக்குழு நட­வ­டிக்­கை­களை நெறிப்­ப­டுத்­தவும் இதன் பின்னர் குறிப்­பி­டப்­படும் விசா­ரணை அலு­வ­லகம் கண்­ட­றியும் விட­யங்கள் தொடர்பில் தொடுக்­கப்­ப‌டும் வழக்­குகள் தொடர்­பிலும் விஷேட வழக்குத் தொடுநர் அலு­வ­லகம் ஸ்தாபிக்­கப்­ப‌டல் வேண்டும். அத்­துடன் அந்த அலு­வ­லகம் தொடர்பில் தேவை­யான வச­திகள் செய்­து­கொ­டுக்­கப்­படல் வேண்டும்.

* சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் இச்­சம்­பவம் தொடர்பில் அடிப்­படை குற்­ற‌­வியல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த நிலையில், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவு தெஹி­வளை ட்ரொபிகல் இன் தங்­கு­வி­டு­தியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் விசா­ரணை செய்­தது. பின்னர் ரவி சென­வி­ரத்ன மற்றும் ஷானி அபே­சே­கர உட்­பட இது தொடர்பில் விசா­ரணை செய்த அதி­கா­ரிகள் நீக்­கப்­பட்டு, 2019 ஆம் ஆண்டின் பின்னர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மீள ஒரு விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தது. இந்த இரு விசா­ர­ணை­க­ளையும் அடிப்­ப­டை­யாக கொண்டு தற்­போது மேல் நீதி­மன்­றங்­களில் 90 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக 41 வழக்­குகள் வரை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. அதில் ஒரு வழக்கு மட்டும் விசா­ரித்து முடிக்­கப்­பட்­டுள்­ளது.

குண்டுத் தாக்­குதல் நடந்து 5 வரு­டங்கள் வரை கடந்துள்ள நிலையில், இத்­தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்­துக்கு இட­மான பல விட­யங்கள் தொடர்பில் சமூ­கத்தின் மத்­தியில் பேசப்­பட்டு வரு­கின்­றன. சஹ்ரான் ஹாஷி­முக்கு மேல் நிலையில் இருந்த அபூ ஹிந் எனும் நபர் தொடர்­பிலும், தாக்­கு­தல்­தா­ரிகள் உள­வுத்­து­றை­யுடன் தொடர்­பு­களைப் பேணி­யமை தொடர்­பிலும் தற்­போதும் பேசப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான விட­யங்கள் தொடர்பில் இது­வரை குற்­ற‌­வியல் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதே போல் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழுவில் வெளிப்­பட்ட சில விட­யங்கள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்த குண்டுத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட அதற்கு உதவி ஒத்­தாசை அளித்த அதனை நெறிப்­ப‌­டுத்­திய அனை­வ­ரையும் கண்­ட­றிய குற்­ற­வியல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கையில் மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

அதனால் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்கவும், அதனை மையப்ப‌டுத்தி விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகத்துக்கு வழக்குத் தொடுக்கவும் முடியுமான வண்ணம் பரந்த அதிகாரத்தை உள்ளடக்கிய விஷேட விசாரணை அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படுவதுடன் அது இச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை கண்டறியும் விஷேட ஆணைக் குழுவின் மேற்பார்வையின் கீழும் விஷேட வழக்குத் தொடுநரின் ஆலோசனையின் கீழ் செயற்படும் நிறுவமாக செயற்படல் வேண்டும்.

* உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை தடுத்­தி­ருக்க முடி­யு­மாக இருந்­தி­ருந்தும், அதனை தடுக்­காத அதி­கா­ரிகள் சிலர் தற்­போதும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அவர்­க­ளுக்கும் எதிர்­கா­லத்தில் கண்­ட­றி­யப்­ப‌டும் ஏனை­ய­வர்­க­ளுக்கும் எதி­ராக ஒழுக்­காற்று மற்றும் குற்­ற­வியல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப‌டல் வேண்டும்.

* உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ரணை தக­வல்­களை மாற்­று­வ­தற்கும், சாட்­சி­யங்­களை மாற்­று­வ­தற்கும், உண்­மையை வெளிப்­ப­டுத்­து­வோரை பழி­வாங்கும் வண்­ணமும் செயற்­பட்ட அனைத்து அதி­கா­ரிகள் மற்றும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமானதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.