சீ.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்ட தலைவர் அஷ்ரஃப்

0 50

‘இலங்கை துறை­முக அதி­கார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினை­வாக ஏற்­பாடு செய்­தி­ருந்த புல­மைப்­ப­ரிசில் வழங்­குதல் மற்றும் ஓய்வு பெறு­ப­வர்­களை பாராட்டி கௌர­விக்கும் வைபவம் கொழும்பு -10, டி.ஆர் விஜே­வர்­தன மாவத்­தை­யி­லுள்ள தபா­லகக் கட்­டிட கேட்போர் கூடத்தில் அண்­மையில் நடை­பெற்­றது. இவ்­வை­ப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் ஆற்­றிய உரையின் தொகுப்பு’

‘எனக்கு முன்பு இங்கு பேசிய பேரா­சி­ரியர் ஜலால்தீன், ஆங்­கிலக் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி உரை­யாற்­றி­யதை நான் இங்கு முதலில் குறிப்­பிட விரும்­பு­கின்றேன். பிரித்­தா­னி­யரின் ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு இந்­நாடு உள்­ளாகி இருந்த போது, அன்­றைய இலங்கை வாழ் மௌல­வி­மார்கள் ஆங்­கி­லக்­கல்­வியை முஸ்­லிம்கள் கற்­பதில் அச்சம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தார்கள். அன்­றைய எதிர்ப்­புகள் கார­ண­மாக ஆங்­கி­லக்­கல்­வியில் முஸ்­லிம்கள் பின்­ன­டைந்­த­தாக குறை­பட்டார். அது உண்­மைதான். ஆனால் அக்­கா­லத்தில் அவர்கள் ஆங்­கி­லக்­கல்வி பற்றி அச்­ச­ம­டைந்­த­தற்கு அன்று நியாயம் இருந்­தது. ஆங்­கிலக் கல்­வி­யென்­பது எமது கலா­சா­ரத்தை தாக்­கக்­கூ­டி­ய­தொன்று என்ற நியா­ய­மான அச்சம் அவர்கள் மத்­தியில் காணப்­பட்­டது. அதனை அடிப்­ப­டை­யாக வைத்தே அவர்­க­ளது செயற்­பா­டு­களும் அமைந்­தன. பின்­னைய நிகழ்­வுகள் அவை அச்சம் கொண்­ட­ள­வுக்கு ஏற்­ப­ட­வில்லை என்­பதே உண்மை என்­ப­தற்கு அவர்­களின் எச்­ச­ரிக்­கை­களும் கார­ண­மாக அமைந்­தன என்­பது நாங்கள் கண்ட அனு­ப­வ­மாகும்.

நான் சட்­டக்­கல்­லூ­ரிக்கு செல்ல முன்னர் ஒரு கிறிஸ்­தவ கல்­லூ­ரியில் முழு­மை­யாக ஆங்­கில மொழி மூலம் எனது இரண்டாம் நிலை கல்­வியைத் தொடர்ந்தேன். கிறிஸ்­தவக் கல்­லூ­ரியில் ஆங்­கிலக் கல்­வியைக் கற்­றாலும் எனது சமூக, சமய விட­யங்­களில் இருந்து பிரிந்து செயற்­ப­டா­த­வ­னா­கவே அன்றும் இன்றும் இருக்­கின்றேன்.

என்­றாலும் பேரா­சி­ரியர் மௌலவி ஜலால்தீன் கூறு­வது போல், ஆங்­கிலக் கல்வி முக்­கி­ய­மா­னது. அதனைக் கற்றால் முழு உல­கத்­து­டனும் தொடர்பை எம்மால் இல­குவில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். இங்கு கொழும்பு மாவட்­டத்தின் பின்­தங்­கிய கல்வி நிலை பற்­றியும் பேசப்­பட்­டது. எமது முஸ்லிம் சமூ­கத்தின் கல்வி நிலைமை பின்­தங்­கி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. கொழும்புப் பாட­சா­லை­க­ளுக்கு புதி­தாக நிய­ம­னங்­களைப் பெற்று கற்­பிக்­க­வரும் ஆசி­ரி­யர்­களில் குறிப்­பி­டத்­தக்­க­ள­வி­லானோர் இடை­ந­டுவில் சட்­டக்­கல்­லூ­ரிக்கும் வேறு மேற்­ப­டிப்பு நிலை­யங்­க­ளுக்கும் செல்லக் கூடி­ய­வர்­க­ளாக உள்­ளனர். அதனால் அவர்கள் நிய­மனம் பெற்ற பாட­சா­லை­களின் மாண­வர்­க­ளது நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மா­ன­தாக உள்­ளது. இது நான் நேர­டி­யாகக் கண்­ட­தொரு விடயம். நான் இங்கு யாரையும் குறை­கூ­ற­வில்லை. தமது பொறுப்­பு­களைச் சரி­வரச் செய்­யாது உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு தமது முன்­னேற்­றத்தில் மாத்­திரம் கரி­சனை காட்­டு­வது முறை­யா­ன­தல்ல.

இப்­ப­ரி­ச­ளிப்பு விழாவின் போது ஏனைய மாவட்­டங்­களை விடவும் கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த மாண­வர்­களே கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தர மற்றும் உயர்­தர பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் கூடு­த­லான பரி­சில்­களைத் தட்டிச் சென்­றதை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இது வர­வேற்­கத்­தக்க விடயம். இங்கு கொழும்பு மாவட்­டத்தை மாத்­திரம் சிறப்­பித்துக் கூறு­வது எனது நோக்­க­மல்ல. சில அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தி­யிலும் இப்­பெ­று­பே­று­களை பெற்றுக் கொடுப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மா­கவும் இருக்­கி­றது.

இன்று நாம் நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான விடயம் எமது சமூ­கத்­திற்­கான ஒரு சக்­தி­வாய்ந்த முக­வ­ரியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாகும். மறைந்த எம்.எச்.எம் அஷ்ரஃப் 1971 இல் சீ.ஐ.டியால் கைது­செய்­யப்­பட்டார். இற்­றைக்கு 53 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­திய, பாகிஸ்தான் யுத்தம் நடை­பெற்­றது. இந்த யுத்­தத்தில் பாகிஸ்தான் தோல்­வி­யுற்று 125 ஆயிரம் பாகிஸ்­தா­னிய இரா­ணுவ வீரர்கள் இந்­தி­யாவில் சர­ண­டைந்­தி­ருந்­தனர். அப்­போது நான் உட்­பட சட்­டக்­கல்­லூரி மாண­வர்கள், சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் சமூக சேவை­யா­ளர்கள் பலர் ஒன்­றி­ணைந்து மாபெரும் கூட்­ட­மொன்றை கொழும்பு ஸாஹிராக் கல்­லூரி மைதா­னத்தில் அவ­சர அவ­ச­ர­மாக ஏற்­பாடு செய்தோம். இக் கூட்டம் முஸ்லிம் ஐக்­கிய முன்­ன­ணி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அதன் பொதுச்­செ­ய­லா­ள­ராக மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் இருந்தார். இந்த 125 ஆயிரம் இரா­ணுவ வீரர்­களை விடு­வித்து யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்­டு­மென்­பதே எமது கூட்­டத்தின் கோரிக்­கை­யாக இருந்­தது. ஆனால் இலங்கை அர­சாங்கம் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் அக்­கூட்­டத்தை நடாத்த அனு­மதி வழங்­க­வில்லை.

இருந்த போதிலும் நாம் அக்­கூட்­டத்தை கபூர் மண்­ட­பத்­திற்கு மாற்றி இந்த 125 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்­க­ளையும் யுத்­தக்­கை­தி­க­ளையும் இந்­தியா உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டு­மென பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்தோம். அதன்­பி­றகு நாங்கள் 5 பேர் முதலில் கைது செய்­யப்­பட்டோம். ஆறா­வ­தாக அஷ்ரஃப் கைது செய்­யப்­பட்டார். அப்­போது அவர் சட்­டக்­கல்­லூரி மாண­வ­ராக இருந்தார். இது 1971ல் நடை­பெற்­றது. அச்­ச­மயம் நான் சட்­டத்­த­ர­ணி­யாகி இருந்த போதிலும் 1972ல் தான் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்தேன். அப்­போது நான் முஸ்லிம் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ராக பதவி வகித்­துக்­கொண்­டி­ருந்தேன்.

இச்­ச­மயம் கைது செய்­யப்­பட்ட அனை­வ­ருக்கும் முழுப் பொறுப்­பா­ள­னாக நான் முன்­னிற்­ப­தா­கவும் அவர்­களை விடு­விக்­கும்­ப­டியும் சி.ஐ.டி யிடம் வேண்­டிக்­கொண்டேன். அதற்­கி­ணங்க அஷ்ரஃப் உட்­பட ஐவரும் விடு­விக்­கப்­பட்­டனர். நான் ஏன் இதை இங்கு கூறு­கின்றேன் என்றால் 53 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே, அதுவும் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி உரு­வாக முன்­னரே கொழும்பில் மாபெரும் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­யக்­கூ­டி­ய­வ­ராக மறைந்த தலைவர் அஷ்ரஃப் இருந்தார் என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தற்­காகும். அவர் செய்த பணிகள் எம்மால் மறக்க முடி­யா­தவை. அத­னால்தான் நாம் அவரை இன்றும் நினைவு கூர்­கின்றோம்.

மறைந்த செனட்டர் எம்.இஸட்.எம் மசூர் மௌலா­னாவின் மகன் இனாம் மௌலானா தலைமை வகித்து இக்­கூட்­டத்தை நடாத்தி செல்­கின்றார். அவர் இலங்கைத் துறை­முக அதி­கா­ர­ச­பையின் முஸ்லிம் மஜ்­லிஸின் தலைவர் என்ற வகையில் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் வந்த மாண­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி கௌர­வித்­ததை எம்மால் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. உங்­க­ளது முஸ்லிம் மஜ்­லி­ஸினால் நல்ல முக்­கிய பணிகள் நடை­பெற்ற வண்­ண­மி­ருக்­கின்­றன. உங்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும்.

நீங்கள் மாண­வர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரி­சில்­களை வழங்­கு­கின்­றீர்கள், இப்தார் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்து நடாத்­து­கின்­றீர்கள், ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய உத­விகள் செய்­கின்­றீர்கள். இவ்­வாறு மறைந்த எம்.எச்.எம் அஷ்ரஃப், சமூ­கத்தில் தேவை­யு­டைய ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களை இனம் கண்டு அவர்­க­ளுக்கு உத­வக்­கூ­டி­ய­வ­ராக இருந்தார். அதை நாங்கள் ஒரு­போதும் மறக்­க­மாட்டோம். நாங்கள் முதலில் அல்­லாஹ்­விற்கு நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருப்­ப­தோடு அஷ்­ரஃ­புக்கும் நன்­றி­கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். அவ­ரது உறு­தி­யான நிலைப்­பாடு இல்­லா­விடின் இத்­த­கை­ய­தொரு இலக்கை எட்­டி­யி­ருக்க மாட்டோம். அதிக எண்­ணிக்­கை­யான குடும்­பங்கள் அவரால் அதிகம் பய­ன­டைந்­துள்­ளனர்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த தலைவர் அஷ்­ரஃ­புக்கு முன்னர் முஸ்லிம் சமூ­கத்தில் இருந்த பல தலை­வர்கள் குறித்து பேரா­சி­ரியர் ஜலால்­தீனும் சகோ­தரர் நகி­யாவும் இங்கு எடுத்­துக்­கூ­றினர். டொக்டர் ராசிக் பரீட், கலா­நிதி டீ.பீ. ஜாயா, டொக்டர் எம்.சி.எம். கலீல், கலா­நிதி பதி­யுத்தீன் மஹ்மூத் ஆகி­யோரின் வரி­சையில் மர்ஹூம் அஷ்ரஃப் வந்­தாலும் நான் அவரை ஒரு தனித்­துவம் மிக்க, மிகவும் பலம் வாய்ந்த முஸ்லிம் தலை­வ­ராகப் பார்க்­கின்றேன்.

வட­மா­கா­ணத்தில் இருந்து முஸ்­லிம்கள் விரட்­டப்­பட்­டார்கள். இருந்தும் நாங்கள் தமி­ழர்­களை எதிர்க்­க­வில்லை. அதி­கா­ரப்­ப­ர­வ­லுக்கு ஆத­ர­வா­ன­வர்கள் நாம். நாட்டைப் பிரிப்­பதை எதிர்ப்­ப­வர்கள். இந்த நாடு இரண்­டாக பிள­வு­ப­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளியோம். நாட்டைப் பிள­வு­ப­டுத்த மர்ஹூம் அஷ்ரஃப் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. அதனால் வடக்கில் இருந்து விரட்­டப்­பட்டோம். ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் அதற்­காக கிழக்கு மாகா­ணத்தில் கொல்­லப்­பட்­டார்கள். காத்­தான்­கு­டியில் ஒரே இரவில் நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் இஷா தொழு­கை­யின்­போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவை அழியா வடுக்கள்.

இன்று நாட்டில் மிகவும் படு­மோ­ச­மான பொரு­ளா­தார நெருக்­கடி காணப்­ப­டு­கின்­றது. நீதி நேர்­மை­யற்ற ஆட்­சி­யா­ளர்­களால் தான் நாடு இந்­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இந்நிலையில் இருந்து நாடு மீட்சி பெற வேண்டும். அதற்காக அனைத்து மக்களும் பேதங்களுக்கு அப்பால் ஐக்கியப்பட வேண்டும்.

இந்த சூழலில் நாம் தமிழ் சமூகத்திற்கு கூறுவது யாதெனில் நாங்கள் உங்களுக்கு விரோதமானவர்கள் அல்லர். உங்களுடன் நாம் எப்­பொ­ழுதும் ஒன்­று­பட்டு இருக்­கின்றோம். ஆனால் நீங்கள் அர­சியல் அதி­காரம் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் தான் என்று கூறு­கின்­றீர்கள். இதுவே ஐயங்­க­ளுக்கு வித்­திட வைக்­கி­றது. அதனால் ஒரே ஒரு மாற்றம் தான் நீங்கள் செய்ய வேண்டும். நாம் யாவரும் தமிழ் பேசும் சமூ­கத்­தினர். தமிழ் பேசும் சமூ­கத்­தி­ன­ருக்­கா­னது என மாற்­றிக்­கொண்டால் யாவரும் ஐயங்­க­ளுக்கு அப்பால் சமத்துவதுடன் வாழலாம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.