வேட்பாளர்களின் எதிர்காலத்தை அன்றி நாட்டின் எதிர்காலம் குறித்தே மக்கள் தீர்மானிக்க வேண்டும்

எனக்கு யாருடனும் போட்டி கிடையாது என்கிறார் ஜனாதிபதி

0 85

ஏனைய வேட்­பா­ளர்கள் தமது எதிர்­கா­லத்­திற்­காக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற அதே­வேளை, நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவே தான் போட்­டி­யி­டு­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாடு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டி­ருந்த இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அந்த நிலை­யி­லி­ருந்து நாட்டைக் காப்­பாற்றி ஆளு­மை­மைய வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதால் தனக்கு யாரு­டனும்  போட்டி கிடை­யாது எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி, அர­சாங்கம் ஆரம்­பித்­துள்ள பொரு­ளா­தார வேலைத்­திட்­டத்தை தொடர்ந்து முன்­னெ­டுக்கும் ஆணையை இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­க­ளிடம் கோரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்­டலில் நேற்று நடை­பெற்ற ஊடக பிர­தா­னி­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்ட ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டார்.

சர்­வ­தேச நாணய நிதியம் அல்­லது கடன் வழங்­கு­நர்­க­ளுடன் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­களின் எந்த அள­வு­கோ­லையும் மாற்ற முடி­யாது எனவும், அவ்­வாறு செய்தால் இலங்­கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்­பா­ளர்­களும் வாக்­கா­ளர்­க­ளுக்கு உண்­மையை கூற வேண்டும் எனவும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்­டுமே முடி­கி­றது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்­டங்­களை இயற்­றி­யுள்­ள­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி, மோசடி ஊடாகச் சம்­பா­தித்த சொத்­துகள் தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை அடுத்த வாரம் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிப்­ப­தாகத் தெரி­வித்தார். ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு ஆளான எவ­ரையும் தாம் ஒரு­போதும் பாது­காக்­க­வில்லை எனவும் ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்தார்.

மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க மேலும் கூறி­ய­தா­வது:

வேறு எவரும் முன்­வ­ராத கார­ணத்­தினால் தான் இன்று நான் ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டு­கின்றேன். நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று இரண்டு வரு­டங்­க­ளுக்குள் நாட்டின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன். இலங்­கையின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யாது என்றும் கூறி­னார்கள். பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து கிரீஸ் மீள 10 வரு­டங்கள் ஆனது. இந்­தோ­னே­சி­யா­விற்கு 8 வரு­டங்கள் பிடித்­தது. இந்த பிரச்­சி­னையை இலங்கை எவ்­வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்­பினர்.

ஆனால் இந்த பிரச்­சி­னையை குறு­கிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்­பினேன். இது தொடர்பில் அப்­போ­தைய ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டினேன். அதனால் அச்­ச­மின்றி இந்த சவாலை ஏற்­றுக்­கொண்டேன். ஆனால் என்னை ஆத­ரிக்க எந்த ஒரு தனிக் கட்­சியும் இருக்­க­வில்லை. பொது­ஜன பெர­மு­னவின் ஒரு குழு எம்­முடன் இணைந்­தது. மற்­றொரு குழு எதிர்க்­கட்­சிக்கு சென்­றது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி குழுவும் எம்­முடன் இணைந்­தது. சிலர் எதிர்க்­கட்­சியில் இணைந்­தனர். நான் கட்­சி­யொன்­றில்­லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்­போது முதற்­கட்ட பணி­களை முடித்­து­விட்டோம். நாட்டை வங்­கு­ரோத்து நிலையில் இருந்து விடு­விக்க நாம் இப்­போது வழி வகுத்­துள்ளோம். அந்தப் பாதையில் தொடர்ந்து பய­ணிப்போம்.

இந்த நாட்டின் பொரு­ளா­தார முறைமை சீர்­கு­லைந்­ததால் மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். மேலும், வரிச்­சுமை அதி­க­ரித்­ததால், சிலர் அதனைச் சுமக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர். அதற்­காக நான் வருந்­து­கிறேன். ஆனால் அதைச் செய்­யாமல் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. நாம் உண்­மையைச் சொல்­வ­தற்குத் தயா­ராக இல்லை என்­பதே எமது நாட்டு அர­சி­யலில் உள்ள சிக்­க­லாகும்.

ஸ்திரத்­தன்மை இல்­லாமல் ஒரு நாடு முன்­னேற முடி­யாது. பங்­க­ளா­தேஷில் நடை­பெறும் விட­யங்­களை தொலைக்­காட்­சியில் பார்த்­த­போது, இந்த நாட்டைக் பொறுப்­பேற்­றி­ருக்­கா­விட்டால் எமது நாட்டின் கதி என்­ன­வாக இருந்­தி­ருக்கும் என்று  சிந்­தித்தேன். பங்­க­ளாதேஷ் பிர­த­ம­ருக்கு வில­கு­மாறு கூறப்­பட்­டாலும் நிர்­வா­கத்தை ஏற்க எந்த நிறு­வ­னமும் இருக்­க­வில்லை. இரா­ணுவம் தலை­யீடு செய்ய முயன்­றாலும் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என போராட்­டக்­கா­ரர்கள் தெரி­வித்­தனர். முஹம்­மது யூனுஸை பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி­யுள்­ளனர். அந்­நாட்டு  அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் பிர­த­ம­ராக வரு­வ­தற்கு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று கூறு­கி­றது. அந்த நிலை எமது நாட்­டுக்கு வந்தால் என்ன நடக்கும்? எமது நாடு அதிர்ஷ்­ட­க­ர­மான நாடு. எப்­ப­டி­யா­வது ஒரு அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். அத­னால்தான் இன்று ஜனா­தி­பதி தேர்­தலை நடத்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாட்டின் எதிர்­கா­லத்­தையே நீங்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்­னேறி அபி­வி­ருத்­தி­ய­டைந்த  நாடாக மாறப்­போ­கி­றோமா? நாட்டில் கஷ்­டப்­படும் மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கப் போகி­றோமா? இளை­ஞர்­க­ளுக்கு சிறந்த எதிர்­கா­லத்தை உரு­வாக்கப் போகி­றோமா?  இல்­லையேல் பழைய அர­சி­யலில் ஈடு­பட்டு பொரு­ளா­தாரம் மீண்டும் வீழ்ச்­சி­ய­டைந்து வரிசை யுகத்­திற்கு செல்லப் போகி­றோமா என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்டும்.

முகங்­களைப் பார்க்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாட்டைக் காப்­பாற்றும் வலி­மையும், கொள்­கையும் தங்­க­ளுக்கு இருக்­கி­றதா இல்­லையா என்­பதை தான் மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளர்­களின் எதிர்­கா­லத்­தை­யன்றி  நாட்டின் எதிர்­காலம் மற்றும் மக்­களின் எதிர்­கா­லத்தைத் தான் தீர்­மா­னிக்க வேண்டும். இங்­கி­ருந்து படிப்­ப­டி­யாக முன்­னே­று­வதா, நாட்டின் பிரச்­சி­னை­களை பலத்­துடன் தீர்ப்­பதா அல்­லது 2022இல் இருந்த நிலைக்கு செல்­வதா என்­பதை முடிவு செய்ய வேண்டும்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­டனும், எமக்கு கடன் வழங்கும் நாடு­க­ளு­டனும் செய்­துள்ள ஒப்­பந்­தங்கள் எத­னையும் மீற முடி­யாது. தற்­போ­துள்ள இந்த இலக்­குகள் மற்றும் வரை­ய­றை­களை மாற்ற முடி­யாது. அப்­படி செய்தால் எமக்கு நிதி கிடைக்­காது. அந்த நிலையில்  நமது நாட்டின் பொரு­ளா­தாரம் மீண்டும் வீழ்ச்­சி­ய­டையும்.

பல்­வேறு கட்­சி­களும்  வெவ்­வேறு வாக்­கு­று­தி­களை அளிக்­கலாம். ஆனால் அவற்றை நிறை­வேற்­று­வது சாத்­தி­ய­மில்லை. அந்த நிலையில் வெட் வரியை அதி­க­ரிக்க நேரிடும். அதுதான் யதார்த்தம். உண்­மையைச் சொல்லி நாட்டைக் காப்­பாற்றத் தயாரா, பொய் சொல்லி ஆட்­சியைப் பிடிக்கத் தயாரா என்­பதைச் சிந்­திக்க வேண்டும். எனவே, அர­சாங்கம் ஆரம்­பித்­துள்ள இந்த வேலைத் திட்­டங்­களைத் தொடர்ந்து முன்­னெ­டுக்க  மக்கள் ஆணையை கோரு­கிறேன்” என ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­களுக்கு அவர் பதிலளிக்கையில்,

அடுத்த 05 வரு­டங்­களில் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னோக்கி கொண்டு சென்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புவோம். அதை செயலில் நிரூ­பித்­துள்ளேன். இம்­முறை மட்­டு­மல்ல, 2001ஆம் ஆண்­டிலும்  வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தைக்  கொண்ட நாட்­டையே நான் பொறுப்­பேற்றேன். அப்­போதும் அந்த பொறுப்பை நிறை­வேற்றி இருக்­கிறேன். எனவே, இந்த திட்­டத்தை முன்­னெ­டுத்துச் செல்லும் திறன் என்­னிடம் உள்­ளது.

ஆனால் ஏனைய வேட்­பா­ளர்கள் வாக்­கு­று­தி­களை மட்­டுமே கொடுக்­கி­றார்கள். அந்த வாக்­கு­று­தி­களை எப்­படி நிறை­வேற்­று­வது என்று அவர்­க­ளிடம் கேட்க வேண்டும். பழைய அர­சியல் முறையில் செயற்­பட்­ட­தா­லேயே இந்த நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்­தது என்­பதை மறந்­து­விடக் கூடாது. எனவே, நாட்டு மக்­களின் எதிர்­கா­லத்தைக் கருத்தில் கொண்டே இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் சுயேட்­சை­யாக போட்­டி­யிடத் தீர்­மா­னித்தேன்.

– சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் ஒப்­பந்தம் செய்­துள்ளோம். அதை செயல்­ப­டுத்த வேண்டும். இந்த உடன்­ப­டிக்­கையை நாம் கடைப்­பி­டித்தால், எமக்கு எந்த பிரச்­சி­னையும் இருக்­காது. மாற்றுத் திட்­டங்­களைக் கொண்­டி­ருப்­ப­வர்கள் அவற்றை வெளியிட வேண்டும். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் இலக்­குகள் மற்றும் நிய­திகள் மாற்­றப்­ப­டாது. அவர்கள் ஒவ்­வொரு நாடு­க­ளுக்­கு­மான அள­வு­கோள்­களை கொண்­டுள்­ளனர். யாரா­வது எதை­யா­வது இல­வ­ச­மாகக் கொடுக்க முன்­வந்தால், VAT வரியை 25% ஆக அதி­க­ரிப்­பதன் மூலம் அதை ஈடு­செய்­யலாம் என்று எண்­ணினால், புள்­ளி­வி­வ­ரங்­களை சீர­மைக்க முடியும் என்று நினைத்தால் சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் உடன்­பா­டு­களை எட்­டலாம். ஆனால் இந்த அள­வீ­டுகள், வரு­மான அளவு மற்றும் செலவு அள­வு­களை எவ­ராலும் மாற்ற முடி­யாது என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.