ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அக்குறணை மக்களை விமர்சித்தமை தவறு

தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து சபையில் ஹலீம் சுட்டிக்காட்டு

0 149

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
ஊடக சுதந்­திரம் என்ற போர்­வையில் ஒரு இனத்­தையும், பிர­தே­சங்­க­ளையும் தவ­றாக சித்­தி­ரிப்­பதை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். அக்­குறணை தீ விபத்து தொடர்பில் சுயா­தீன ஊடக நிறு­வ­னத்தின் நிகழ்ச்சி தொகுப்­பாளர் குறிப்­பிட்ட கருத்து தவறு என்­பதை அந்­நி­று­வனம் ஏற்றுக் கொண்டு பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளது. இவ்­வா­றான நிலைமை மீண்டும் ஏற்­பட கூடாது என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற மது வரி கட்­டளைச் சட்டம் மற்றும் ஏற்­று­மதி, இறக்­கு­மதி கட்­டுப்­பாட்டுச் சட்­டங்கள் குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்றும் போது மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,
அக்­கு­றணை பகு­தியில் அண்­மையில் இடம்­பெற்ற தீ விபத்துச் சம்­பவம் பற்றி அவ­தானம் செலுத்த விரும்­பு­கிறேன். அக்­கு­றணை நகரில் உள்ள மிலானோ ரெஸ்­டுரன்ட் துர­திஸ்­ட­வ­ச­மாக தீ அனர்த்­தத்­துக்கு உள்­ளா­னது. இந்த தீ பரவல் கார­ண­மாக மூன்று வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யா­கின. இச்­சம்­பவம் அக்­கு­றணை மக்­க­ளையும் சோகத்தில் ஆழ்த்­தி­யது.

இந்த சம்­ப­வத்தை அனைத்து ஊட­கங்­களும் முக்­கி­ய­மா­ன­தொரு செய்­தி­யாக வெளி­யிட்­டன. ஆனால் ஒரு குறிப்­பிட்ட ஊடக நிறு­வ­னத்தின் சுயா­தீன செய்திப் பார்வை என்ற நிகழ்ச்­சியில், அதன் நிகழ்ச்சி தொகுப்­பாளர் இந்த தீ விபத்தை திரிபு­ப­டுத்தி, இதனை ஒரு தீ விபத்து என்று மாத்­திரம் குறிப்­பி­டாமல் அக்­கு­றணை மக்­களை மிக மோச­மாக விமர்­சித்து கருத்­துக்­களை குறிப்­பிட்­டுள்ளார். இதனால் அக்­கு­றணை மக்கள் கொதித்­தெ­ழுந்­துள்­ளார்கள்.

இவ­ரது முறை­யற்ற கருத்து தொடர்பில் அக்­கு­றணை இளை­ஞர்கள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விலும், பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். இந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்.

நிலைமை மோச­ம­டை­வ­தற்கு முன்னர் அக்­கு­றணை ஜம்­இ­ய்யத்துல் உலமா மற்றும் வர்த்­தக சங்கம் முன்­வந்து இதற்­கு பேச்­சு­வார்த்தை ஊடாக தீர்வு காண்­பது குறித்து ஆராய்ந்­தனர். இந்த விடயம் பற்றி அவர்­க­ளுடன் நானும் பேசி­யி­ருந்தேன், இந்த நிறு­வனம் அதே நிகழ்ச்­சியில் பகி­ரங்க மன்­னிப்புக் கோர வேண்டும் என்று வலி­யு­றுத்­தினேன்.

இந்த விடயம் குறித்து அந்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ருடன் உரை­யா­டிய போது தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ளதை அவர் முழு மன­துடன் ஏற்றுக் கொண்டார்.

தமது தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஊடாக மன்­னிப்பு கோரு­வ­தாக குறிப்­பிட்டார். அதற்­க­மைய மன்­னிப்பு கோரி­யுள்­ளனர். இவ்­வாறு இந்த பிரச்­சினை சுமு­க­மாக முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது.

ஊடக சுதந்­திரம் என்ற போர்­வையில் இருந்துக் கொண்டு முறை­யற்ற வகையில் செயற்­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்­கது. இந்த நிகழ்ச்சி தொகுப்­பாளர் அக்­குறணை வெள்ளப்பெருக்கு பற்றி பேசியிருந்தார். இந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.