மஹர பள்ளியை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க காணி ஒதுக்கீடு செய்க

புத்தசாசன அமைச்சிடம் முஸ்லிம் திணைக்களம் கோரிக்கை

0 202

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்ள நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்­மா­ணிக்க சிறைச்­சாலை உத்­தி­யோக பூர்வ இல்­லத்­துக்கு பின்னால் 20 பேர்ச் காணி ஒதுக்­கித்­த­ரவும், அல்­லது பிர­தேச சபை நிர்­வாக எல்­லைக்குள் 20 பேர்ச் காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் மத நட­வ­டிக்­கை­க­ளுக்­கான மேல­திக செய­லா­ளரைக் கோரி­யுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் கடிதம் மூலம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார்.
கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது; 2022 டிசம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற விவா­த­மொன்றில் உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல் தொடர்பில் நீதி­ய­மைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பினார். அதற்கு நீதி­ய­மைச்சர் பதி­ல­ளிக்­கையில் சிறைச்­சாலை திணைக்­களம் இது தொடர்பில் ஜனா­தி­ப­தியை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அதற்­கென காணி­யொன்­றினை பெற்­றுத்­தந்­ததும் அவ்­வி­டத்தில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார் என்று கூறினார். திணைக்­க­ளத்­தினால் தகுந்த காணி­யொன்­றினை இனங்­காண முடி­யா­மை­யாலே அமைச்­சிடம் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் R/1079 /GM/31 எனும் இலக்­கத்தின் கீழ் 1967.03.07 ஆம் திகதி பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

1902 ஆம் ஆண்டு இலங்கை பிரித்­தா­னியர் ஆட்­சிக்­கா­லத்தில் மஹர சிறைச்­சா­லையில் ஏற்­பட்ட பாரிய கல­வ­ரங்­க­ளை­ய­டுத்து நிர்­வாகம் அங்கு கட­மை­யி­லி­ருந்த சிறைச்­சாலை அதி­கா­ரிகள், காவ­லர்­களை நீக்­கி­விட்டு மலே நாட்­டி­லி­ருந்து அழைத்து வரப்­பட்ட சிறைக்­கா­வ­லர்­களால் கல­வ­ரங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

மலே நாட்டு சிறைக்­கா­வ­லர்­க­ளுக்­கா­கவே இந்தப் பள்­ளி­வாசல் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது. பல­ த­சாப்த கால­மாக முஸ்லிம் சிறைக்­கா­வ­லர்கள், அதி­கா­ரிகள் மற்றும் அவர்­களின் குடும்­பத்­தினர் இப்­பள்ளிவாசலை பயன்­ப­டுத்தி வந்­துள்­ளனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இப்­பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இந்த ஏற்­பாடு நாட்டின் வக்பு சட்­டத்தை மீறி­ய­தாகும். ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்கு தேவை­யான உப­க­ர­ணங்கள் பள்­ளி­வா­சலில் இருந்­தன. இந்த உப­க­ர­ணங்­களை உப­யோ­கிப்­ப­தற்கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இங்கு வதியும் முஸ்­லிம்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க குறைந்தது 20 பேர்ச் காணியினைப் பெற்றுத்தரவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்பட்டு ஒரு மாத காலமாகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.