அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்க தயார்

ரிஷாட், மனோ தெரிவிப்பு

0 658

புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் அமைச்சுப் பத­வியை ஏற்­கா­தி­ருக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யு­தீனும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணே­சனும் தெரி­வித்­துள்­ளனர்.

நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்­றக்­குழுக் கூட்­டத்­தின்­போதே இவ்­விரு கட்சித் தலை­வர்­களும் இக் கருத்தை முன்­வைத்­துள்­ளனர்.

ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்­சி­ய­மைக்­கும்­பட்­சத்தில் அர­ச­மைப்பின் 19 ஆவது திருத்­தத்­திற்­க­மைய அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள அமைச்­சு­களின் எண்­ணிக்கை 30 ஆக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்­சு­களின் எண்­ணிக்கை 40 ஆக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் தற்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஐ.தே.முன்­னணி பக்கம் தாவிய உறுப்­பி­னர்­களும் அமைச்சுப் பத­வி­களைக் கேட்­பதால், புதிய அமைச்­சர்கள் நிய­ம­னத்தில் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.
இதனால் அமைச்சர் தொகையை 30 இற்குள் வரை­ய­றுக்க தான் தடு­மா­று­வ­தா­கவும், எவ­ரா­வது சுய­மாக முன்­வந்து அமைச்சு பத­வி­களை பெறாமல் இருக்க முடி­யுமா என்றும் இக் கூட்­டத்தில் பிர­தமர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.
இதற்கு பதி­ல­ளித்த மனோ கணேசன், அவ­சி­ய­மானால், நான் அமைச்சு பதவியை ஏற்­கா­தி­ருக்­கிறேன் எனக் கூறி­யுள்ளார். ரிசாட் பதி­யு­தீனும் இதே கருத்தை முன்­வைத்­துள்ளார். இதனை மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிவில் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இதற்­கி­டையில், புதிய அர­சாங்­கத்தில் எவ்­வித அமைச்சு பத­வி­யையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித் துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.