முஸ்லிம் அநாதை இல்ல விடயம் தொடர்பில் உலமா சபை ஆராய்வு

நிர்வாகம், பழைய மாணவர்களை அழைத்து பேச்சு

0 236

மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலை­யத்தின் மள்­வானை கிளையின் பாட­சா­லையை தனி­யா­ருக்கு வழங்கி, அநா­த­ர­வான மாண­வர்­களின் சொத்­துக்­களை அப­க­ரிக்க முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக கூறப்­படும் நிலையில், இந்த விவ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை தீவிர அவ­தா­னத்தை செலுத்­தி­யுள்­ளது.

அநா­தை­களின் நல­னுக்­காக மட்டும் பயன்­ப­டுத்த வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை கையாடல் செய்ய எடுக்­கப்­படும் முயற்­சிகள் தொடர்பில் ஜம் இய்­யதுல் உலமா சபையின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ள நிலையில், அது தொடர்பில் தீர்­மானம் ஒன்­றினை எடுக்க ஜம் இய்­யதுல் உலமா சபையின் பத்வா குழுவும், நிறை­வேற்றுக் குழுவும் தீவி­ர­மாக விட­யத்தை ஆராய்­வ­தாக அறிய முடி­கின்­றது.

இது தொடர்பில் , அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபை மாகொல முஸ்லிம் அநா­தைகள் நிலை­யத்தின் தற்­போ­தைய நிர்­வாக சபை­யி­ன­ரையும், பழைய மாணவர் சங்க பிரதி நிதி­க­ளையும் தனித் தனி­யாக சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அநா­தைகள் நிலைய நிர்­வாக சபை­யி­ன­ரையும், நேற்று முன் தினம் 6 ஆம் திகதி பழைய மாணவர் சங்க பிரதி நிதி­க­ளையும் அகில இலங்கை ஜம் இய்­யதுல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் தலை­மை­யி­லான குழு­வினர் மாளி­கா­வத்­தையில் உள்ள தமது தலை­மை­ய­கத்­துக்கு அழைத்து கலந்­து­ரை­யாடி விட­யங்­களை கேட்­ட­றிந்­துள்­ளனர்.

இந் நிலையில், அநா­தை­களின் நல­னுக்­காக பயன்­ப­டுத்த வேண்­டிய சொத்­துக்­களின் பாது­காப்பு, அதன் பயன்­பாடு மற்றும் பரா­ம­ரிப்பு தொடர்பில் மிக விரைவில் ஜம் இய்யதுல் உலமா சபை தனது தீர்மானத்தை அறிவித்து, சுமுகமாக குறித்த பிரச்சினையை தீர்க்க எதிர்ப்பார்பதாக அறிய முடிகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.