இனவாதத்துக்கு பலியான சதகத்துல்லாஹ் மௌலவி நீதி நிலைநாட்டப்படுமா?
முஸ்லிம்கள் பஸ் வண்டிக்குள் இருக்கிறார்களா அவர்களைக் கொல்ல வேண்டும் என்று பொல்லுகளுடனும், இரும்புக்கம்பிகளுடனும் பஸ்ஸுக்குள் அன்று ஏறியவர்கள் சதகத்துல்லாஹ் மெளலவியை தலையில் பலம்கொண்ட மட்டும் தாக்கினார்கள்.
கண்டி, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் பரவிக்கொண்டிருந்த காலமது. கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று இனவாதிகளால் தாக்கப்பட்ட சதகத்துல்லாஹ் மெளலவி 9 மாதங்கள் 19 நாட்களின் பின்பு வபாத்தானர். இனவாதிகளின் இலக்கு நிறைவேறியது.…