பேதங்களின்றி நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன்
எமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பேதமின்றி எமது நாட்டு மக்களுக்காக உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரை வரவேற்பதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பிரதான நகரங்கள் எங்கும் பாரியளவில் மக்களினால் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இதில்…