பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியது தவறு: இரு உரிமை மீறல் மனுக்கள் பெப்ரவரி 7 இல் பரிசீலனைக்கு
மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வருடம் பிரதமராக நியமித்தமை சட்டத்திற்கு எதிரானது எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியமை மற்றும் அமைச்சரவையை நீக்கியமை ஆகியன சட்டவிரோதம் எனவும் உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. அன்றைய தினம் பொறுப்புக் கூறத்தக்க தரப்புக்கு அறிவித்தல் விடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.…