பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியது தவறு: இரு உரிமை மீறல் மனுக்கள் பெப்ரவரி 7 இல் பரிசீலனைக்கு

மஹிந்த ராஜபக்ஷவை  கடந்த வருடம் பிர­த­ம­ராக நிய­மித்­தமை சட்­டத்­திற்கு எதி­ரா­னது எனவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­யமை மற்றும் அமைச்­ச­ர­வையை நீக்­கி­யமை ஆகி­யன சட்­ட­வி­ரோதம் எனவும் உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்ட  இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை எதிர்­வரும் பெப்­ர­வரி  7 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. அன்­றைய தினம் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­புக்கு அறி­வித்தல் விடுக்­கவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.…

மூன்று ஆளுநர்கள் பதவியேற்பு

வடக்கு உட்­பட மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள்  ஜனா­தி­ப­தியால் நேற்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட வடக்கு, சம்­ப­ர­க­முவ மற்றும் ஊவா மாகாண ஆளு­நர்கள் நேற்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­திக்கு முன்னால் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­டனர். அதன் பிர­காரம் வட­மா­காண ஆளு­ந­ராக இருந்த ரெஜிநோல்ட் குரேக்கு பதி­லாக கலா­நிதி சுரேன் ராகவன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் சப்­ர­க­முவ மாகாண ஆளு­ந­ராக இருந்த நிலுக்கா ஏக்­க­நா­யக்­க­வுக்கு பதி­லாக கலா­நிதி தம்ம திசா­நா­யக்­கவும் ஊவா…

சவூதி அரேபியாவில் விவாகரத்து தொடர்பான தகவலை பெண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வழங்க புதிய சட்டம்

பெண்ணொருவர் விவாகரத்துச் செய்யப்படும்போது அது தொடர்பான தகவலை குறித்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்பதற்கான புதிய சட்டம் சவூதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இரகசிய விவாகரத்துக்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள் தாபரிப்பு முதலிய பாதுகாப்புக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தமது விவாக நிலையினை சரிவர உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இப்புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைமைவாத மன்னராட்சியுடனான சவூதி அரேபியாவில் கடந்த வருடம் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கிருந்த தடை…

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவுகளை உலுக்கிய 6.6 ரிச்டர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மொலுக்காஸ் தீவுகளின் வடக்கு மலுக்குவின் டெர்னேட் நகருக்கு வடமேற்கே 173 கிலோமீற்றர் தூரத்தில் 6.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 60.5 கிலோமீற்றர் ஆழத்தில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அதன் பின்னர் 5.0 தொடக்கம் 5.1 ரிச்டர் வரையான தொடர் நிலநடுக்கங்கள் ஏற்ட்டுள்ளன. முன்னதாக வெளியிடப்பட்ட அமெரிக்க புவியியல் ஆய்வுமைய அறிக்கையில் 7.0 ரிச்டர் நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.…