லசந்த கொல்லப்பட்டு 10 வருடங்கள்: கொலையை மறைக்க 4 அப்பாவிகள் கொலை
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 10 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவுகூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது. லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
நேற்றுக் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால்…