அம்பாறை, திகன வன்முறை நஷ்டஈடுகள் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பிலிருக்கும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும், செயற்பாட்டுப் பணிப்பாளரும் புதிதாக இதுவரை நியமிக்கப்படாததால் அம்பாறை மற்றும் கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளின்போது பாதிப்புக்குள்ளான சொத்துக்களுக்கான நஷ்டஈடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின்போது மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமயவிவகார…