விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவுங்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவுங்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா. சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும்  முரணான சம்பவங்கள்…

பள்ளியை அகற்றுவதே சுமுக தீர்வை ஏற்படுத்தும்

தம்­புள்ளை புனித பூமிக்குள் பள்­ளி­வா­ச­லொன்று இருக்க முடி­யாது. அங்­கி­ருந்து பள்­ளி­வா­சலை அகற்­று­வதன் மூலமே அப்­ப­கு­தியில் சுமு­க­மான நிலை­யினை உறு­திப்­ப­டுத்த முடியும். தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு நிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் 5 ஏக்கர் வேண்­டு­மென்­றாலும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என தம்­புள்ளை மேயர் தாலிய ஒபாத தெரி­வித்தார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ருடன் நடாத்தி வரும்…

இன மத பேதமின்றி குடிநீரை வழங்கியோர் புண்ணியவான்கள்

புன்னைக்குடாவில் மீள்குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு இன மத பேதமின்றி குடிநீரை பெற ஏற்பாடு செய்து தந்த  புண்ணியவான்கள் என ஏறாவூர் - புன்னைக்குடா புண்ணியா ராமய விஹாராதிபதி தம்பகல்லே வனரத்தின தேரர் தெரிவித்தார். மீள்குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பினால் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தினூடாக இன மத பேதமின்றி பொதுமக்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு புன்னைக்குடா கடற்கரையோர பகுதிகளில் மீள் குடியேறிய 15  மீனவ குடும்பங்களுக்கும் உல்லாசப் பயணிகள்,…

நாட்டுக்காக குரல் எழுப்பும் ஞானசாரவை விடுவியுங்கள்

நாட்­டுக்­காகக் குரல் கொடுக்கக் கூடி­ய­வர்­களே எங்­க­ளுக்குத் தேவை. அந்த வகையில் கல­கொட அத்தே ஞான­சார தேரரை விடு­தலை செய்ய வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக “அரு­ணலு ஜனதா பெர­முன” அமைப்பின் தலைவர் டாக்டர் கிரிஷான்0 ராம சுந்­தரம் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்ள கோரிக்கை வரு­மாறு: ஜனா­தி­ப­தி­யிடம் மிகவும் பணி­வு­டனும் கரு­ணை­யு­டனும் கேட்­டுக்­கொள்­வது, இய­லு­மாயின் எங்கள் ஞான­சார ஹாமு­து­ருவை விடு­தலை செய்­யுங்கள். நீங்கள் சகல…