சவூதி நாட்டவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு
சவூதி நாட்டவர்களை தனியார் நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், தொழிற்சந்தையில் அவர்களது பங்குபற்றுதலினை அதிகரிப்பதற்காகவும் தனியார் நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்படும் சவூதி நாட்டவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு பகுதிக்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யவுள்ளது.
இந்த முன்னெடுப்பு தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அஹ்மட் அல்-ராஜ்ஹி அறிவித்தார்.
மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முதன்மைச் சபையின் தலைவராகவும் பதவி வகிக்கும் அல்-ராஜ்ஹி 'திறன்களை…