ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் எமது வேட்பாளரை அறிவிப்போம்

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்குப் பெரிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எமது…

சவூதி நாட்டவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

சவூதி நாட்டவர்களை தனியார் நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், தொழிற்சந்தையில் அவர்களது பங்குபற்றுதலினை அதிகரிப்பதற்காகவும் தனியார் நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்படும் சவூதி நாட்டவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு பகுதிக்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யவுள்ளது. இந்த முன்னெடுப்பு தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அஹ்மட் அல்-ராஜ்ஹி அறிவித்தார். மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முதன்மைச் சபையின் தலைவராகவும் பதவி வகிக்கும் அல்-ராஜ்ஹி 'திறன்களை…

ஜனாதிபதி வேட்பாளர் குமார் சங்கக்கார அல்ல

குமார் சங்கக்கார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார். மேலும்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்கக்காரவுக்கும் தனக்குமிடையில்  எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கு இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. நேற்று…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் முரண்பாடு  

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை. ஒவ்வொருவர் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் உள்ளன. கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆனால் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றுதிரட்ட முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்  ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்…