இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை

தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு தீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டியிருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அது சாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று மாலை  அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள்…

மத நிந்தனை, தீவிரவாதத்தை  நிராகரிக்கிறோம்

இலங்கையில் உள்ள அரபுக் கல்லூரிகளை வலுவூட்டும் நோக்கில் “சமூகத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதில் அரபுக் கல்லூரிகளின் வகிபாகம்” எனும் கருப்பொருளில் அரபுக் கலாசாலை அதிபர்கள், போதனாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக அகில இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த மாநாடு கண்டி, தஸ்கர அல்–ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில்  கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்றத. இம் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் பிற சமூகங்களுடனும் சமயத்தவர்களுடனும் சமாதானமாகவும்…

இந்தோனேசியா வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இந்தோனேசியா வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் நேற்று மற்றும் முன்தினம் பெய்த  கடும் மழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர், இனிநிலையில் குறைந்தது 40 பேர் பலியாகி இருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்கு சுலாவேசியின் 10 மாவட்டங்களில் இருந்து 3400 இற்கும் கூடுதலானோரை பாடசாலைகள், பள்ளிவாசல்கள்…

அடுத்த ஜனாதிபதி வேட்பளர் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார் வெல்கம தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வருட இறுதியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னர் தற்போதைக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். கொலைகார வரலாற்றைக்…