இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை
தற்போதைய அரசோ, ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு தீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டியிருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அது சாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று மாலை அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள்…