தேர்தலை அறிவிக்கவிடின் பதவியிலிருந்து இராஜினாமா

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வரையில் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர்வரை மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்குமாயின், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்வேன் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில்…

பலஸ்தீன பிரஜையை கொன்றவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பலஸ்தீன நபர் கொல்லப்பட்டமை அதிர்ச்சியளிப்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளதென என மத்திய கிழக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நிக்லோய் மிலண்டனோவ் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகளின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்துமாறும் அவர் இஸ்ரேலிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். ரமல்லாஹ்வுக்கு வடகிழக்கே அமைந்துள்ள அல்-முக்ஹைர் கிராமத்தில் குடியேற்றவாசிகளும் இஸ்ரேலியப் படையினரும் இணைந்து நடத்திய…

ஞானசார தேரருக்கு விடுதலையளிக்குக

நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞானசாரதேரருக்கு…

யெமன் தாய்மார்கள் தமது மகன்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அமீரக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தமது மகன்மார்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரி யெமனிலுள்ள தாய்மார்கள் நாட்டின் உள்துறை அமைச்சரின் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது அல்லது காணமலாக்கப்படுதலுக்கு எதிராகப் போராடும் யெமன் பெண்கள் அமைப்பான கடத்தப்பட்டோரின் தாய்மார்களின் அமைப்பு தமது பிள்ளைகளின் நிலைமை தொடர்பில் அறியத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல் போயுள்ளோரில் சிலரின் தகவல்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை. தடுத்து…