மூன்று பாக். பிரஜை உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டணை
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர் மற்றும் மூன்று இலங்கையர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு சட்டமா அதிபரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும். குற்றவாளிக்கு மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது விடுதலை பெற்றுக் கொள்வதற்கோ வேறு வழிமுறைகள் உள்ளனவா என்பது சட்டமா…