ஊடகவியளாலர்களுக்கு  நீதியை நிலைநாட்டுக

"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.  அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்." இவ்வாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8  ஊடக அமைப்புகள் நேற்று  கூட்டாகக் கோரிக்கை விடுத்தன. ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ்…

ஞானசார தேரரின் பணியை தொடர ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும்

நாட்டில் காணப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குரல்கொடுத்து, அவற்றுக்குத் தீர்வுகாணும் நோக்கில் செயற்பட்டுவந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை தொடர்ந்தும் நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டுமென சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால…

சிரிய அகதிகள் பாதுகாப்பாக திரும்பிச்செல்ல உருவாக்கப்படும் பாதுகாப்பு வலயம் உதவும்

துருக்கி அடைக்கலம் வழங்கியுள்ள சிரிய அகதிகள், பாதுகாப்பாக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது என துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று இஸ்தான்பூலில் பேசிய அர்துகான், சுமார் 300,000 சிரிய அகதிகள் வடக்கு சிரியாவின் துருக்கியின் ஆதரவுடனான கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு மீளத் திரும்பிவிட்டனர் எனத் தெரிவித்ததோடு மில்லியன் கணக்கான சிரிய மக்கள் பாதுகாப்பு வலயத்தினூடாக மீளத் திரும்புவதற்கு வருகை…

இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகும் மலேசிய பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றதென மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மட் கடந்த திங்கட்கிழமையன்று விமர்சித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவினைத் தெரிவித்து வலைத்தளமொன்றில் அவர் எழுதியுள்ள பதிவில், இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றது. அது கண்டிக்கப்பட வேண்டிய நாடாகும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்கு மலேஷியா விசா வழங்க மறுத்ததையடுத்து இவ்வருட போட்டியினை மலேஷியாவில் நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச பரா ஒலிம்பிக் அமைப்பு மீள்ப்பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே மலேஷிய பிரதமர் மஹதிரின்…