ஊடகவியளாலர்களுக்கு நீதியை நிலைநாட்டுக
"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்." இவ்வாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் நேற்று கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.
ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ்…