மாகாண சபை தேர்தல் உடன் நடத்தப்பட வேண்டும்
தேர்தல் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையாகும். எமது நாட்டில் இந்த உரிமை அரசியலமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களைப் பேணும் ஜனநாயக நாடான இலங்கையில் மக்களின் இந்த உரிமை உரியகாலத்தில் வழங்கப்படாது ஏன் இழுத்தடிக்கப்படுகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த வருடம் தேர்தல் வருடமாக அமையவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை நாம்…