தனியார் கல்வி நிலையத்தில் தீ மாவனெல்லையில் சம்பவம்
மாவனெல்லை புதிய கண்டி வீதியில் நீதிமன்ற வீதி சந்தியில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நான்காம் மாடியில் அமைந்துள்ள சிடி கொலேஜ் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் திடீரென்று தீ பரவியிருக்கின்றது.
இந்த தீ பரவல் காரணமாக அந்தக் கல்வி நிறுவனத்தின் தளபாடங்கள், கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் உட்பட அனைத்தும் முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளன. இதனால் கல்வி நிறுவனத்திற்கு சுமார் 30 இலட்சம் ரூபா அளவில் இழப்பேற்பட்டிருப்பதாக…