வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுகின்றன
மத மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திர உரிமையை மீறும் வகையில் அண்மைய சில வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினாலும் தேசியவாத சிங்கள பௌத்த பிக்குகளாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.