வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய லக்ஷ்மன் யாபா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக கடந்த முதலாம் திகதி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேருவளை குப்பை மேடு உருவாக்கப்பட்ட பகுதி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, இந் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட சட்ட ரீதியிலான தகைமை இல்லை என உயர் நீதிமன்றம் 'உரிமைவினா நீதிப் பேராணை' (Writ of Quo warranto) ஒன்றினை பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.