இம்முறை ஹஜ் யாத்திரைக்காக சென்றுள்ள இலங்கையர்களின் நலன்களை கவனிப்பதற்காக முஸ்லிம் சமய திணைக்களத்தினால் அனுப்பப்படவுள்ள இரண்டு ஆண் உத்தியோகத்தர்களையும் ஒரு பெண் உத்தியோகத்தரையும் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்படவிருந்த நியமனம் -கல்முனை மாகாண நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த அராஜகத்தை பல ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இரட்டை வேடம் போட்டு இஸ்ரேலுடன் தேனிலவு கொண்டாடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அதிருப்தி வெளியிட்டார்.