திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு விவகாரம் : சட்ட ரீதியாக தீர்வினை பெற முன்வருவோம்!
அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டமையானது, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.