ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அக்குறணை மக்களை விமர்சித்தமை தவறு
ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு இனத்தையும், பிரதேசங்களையும் தவறாக சித்திரிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அக்குறணை தீ விபத்து தொடர்பில் சுயாதீன ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறிப்பிட்ட கருத்து தவறு என்பதை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.