அளுத்கம, பேருவளை வன்முறைகள்: அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை அக்டோபரில்
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.