திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன
இலங்கையில் அண்மைக் காலத்தில் கட்டமைக்கப்பட்ட பக்கச்சார்பு மற்றும் இஸ்லாமோபோபியாவின் நிகழ்வுகள் தொடர்பில் அனைவருக்குமான நீதி கரிசனை கொண்டுள்ளது. பரீட்சையின் போது காதுகளை மூடாதிருக்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக அண்மையில், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை நிறுத்தி வைக்க பரீட்சை அதிகாரிகள் தீர்மானித்தனர்.