17 கோடி மக்கள் வசிக்கும் பங்களாதேஷில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் முன்னரைவிட மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ததன் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் மக்களை கட்டாயத் தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி அமைச்சரவை தீர்மானம் எடுத்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
அத்துடன், அந்த பலவந்த தகனம் என்கின்ற அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் யார் என்பதை வெளிப்படுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.