ஞானசார தேரர்: விடுதலை அல்ல; பிணையே!
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு, நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி உத்தரவிட்டது.