ஓரினச்சேர்க்கை யாளர்கள் எனப்படும் ஒரு சிறிய கூட்டத்தின் கோரிக்கையை சட்டமாக்குவது எமது எதிர்கால சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகள், கொடிய நோய்கள் மற்றும் சமூக, கலாசார சீர்கேடுகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, நமது நாட்டின் கலாசாரத்திற்கு முற்றிலும் மாற்றமான சட்டங்களை இயக்குவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தை ஒரு முகப்படுத்தி, அதன் தராதரத்தை நிலையான ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து மாணவர்களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் குறிப்பாக கல்வி அமைச்சும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.