இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி

தூய அரபு மொழியில் எழு­தப்­பட்ட புனித அல்-­குர்ஆன், இஸ்­லா­மிய மத விழு­மி­யங்கள் மற்றும் போத­னைகள் ஆகி­ய­வற்றை பாது­காப்­ப­தற்கும் பரப்­பு­வ­தற்கும் பெரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் ஹினி­தும சுனில் செனவி தெரி­வித்தார். மகத்­தான கலா­சார அடை­யா­ளங்­களைக் கொண்ட உல­க­ளா­விய மொழி­யா­க­வுள்ள அரபு மொழி­யினை 450 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட மக்கள் பேசு­கின்­றனர். அத்­துடன் சுமார் 25 நாடு­களின் உத்தி­யோ­க­பூர்வ மொழி­யா­கவும் அரபு மொழி காணப்­ப­டு­கின்­றது என அவர் குறிப்­பிட்டார்.

தவறாக புரியப்பட்ட அரபு மத்ரஸாக்கள் விவகாரம்!

கடந்த ஜன­வரி 09ஆம் திகதி வெளி­யான இப் பத்­தியில் “அரபு மத்­ர­ஸாக்கள் க்ளீன் செய்­யப்­ப­டு­வது எப்­போது?” எனும் தலைப்பில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இது நாம் கூற வந்த விட­யத்தை இத­ய­சுத்­துடன் விளங்கிக் கொள்ள முற்­ப­டா­ததன் வெளிப்­பா­டே­யாகும்.

கல்-எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி விவகாரம்: சொத்துக்களை வக்ப் செய்வதற்கு நிர்வாகம் சார்பில் ஆட்சேபனை?

கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரி­ வி­வ­கா­ரத்தில், அக்­கல்­லூரி பெயரில் உள்ள அனைத்து சொத்­துக்­க­ளையும் வக்ப் சொத்­துக்­க­ளாக பதிவு செய்ய, அக்­கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிர்­வாகம் ஆட்­சே­பனம் வெளி­யிட்­டுள்­ளது. கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி விவ­கார சொத்­துக்கள் தொடர்பில் வக்ப் சபையில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் போது, கடந்த வாரம் இந்த ஆட்­சே­ப­னங்­களை தாக்கல் செய்ய, கல்­லூரி நிர்­வாகம் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனு­மதி கோரி­யுள்ளார்.

470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அம­லுக்கு வந்­தி­ருப்­பதால் காஸாவில் 470 நாட்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த ஒப்­பந்­தப்­படி, இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன கைதிகள் விடு­த­லைக்கு ஈடாக, ஒவ்­வொரு கட்­ட­மாக ஹமாஸ் தன் வச­முள்ள இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­விக்கும். விடு­விக்­கப்­படும் ஒவ்­வொரு இஸ்­ரே­லிய பண­யக்­கை­திக்கும் 30 பலஸ்­தீன கைதி­களை இஸ்ரேல் சிறை­களில் இருந்து விடு­விக்க வேண்டும் என்­பது நிபந்­தனை.