பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய‌ பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இட‌மாற்றம்

தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சம்பத் ரண­சிங்க பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார். கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி விவ­கா­ரத்தில், உட­ன­டி­யாக செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை தொடர்பில், பொலிஸ் கட­மை­களை நிறை­வேற்­றாமை தொடர்பில் அவரை இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்திற்கு சவூதி 10.5 மில். டொலர் நிதி ஒதுக்கீடு

கடந்த பல வரு­டங்­க­ளாக கைவி­டப்­பட்­டுள்ள கிண்­ணியா, குறிஞ்­சா­க்கேணி பாலத்தின் நிர்­மாணப் பணி­களை மீள ஆரம்­பிக்க 10.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் ஊடா­கவே இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இறுக்கமாக்கப்பட வேண்டும்

நாட்டில் கடந்த சில வாரங்­க­ளாக வீதி விபத்­துக்கள் அதி­க­ரித்து வரு­வ­தையும் அதன் மூல­மாக உயி­ரி­ழப்போர் மற்றும் காய­ம­டை­வோரின் எண்­ணிக்­கைகள் அதி­க­ரித்து வரு­வ­தையும் ஊடக செய்­திகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. இலங்கை பொலிஸ் போக்­கு­வ­ரத்து திணைக்­கள தர­வு­க­ளின்­படி கடந்த ஐந்து ஆண்­டு­களில், மர­ணத்தை ஏற்­ப­டுத்தக் கார­ண­மான 11,581 வீதி விபத்­துகள் இலங்­கையில் பதி­வா­கி­யுள்­ளன. இந்த விபத்­து­களில் மொத்­த­மாக 12,140 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் 33,259 க்கும் மேற்­பட்டோர் நிரந்­த­ர­மாக ஊன­முற்­றுள்­ளனர்.

இலங்கை வந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன்மார் நாட்டிடம் ஒப்படைக்க முடியுமா?

கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் திகதி இலங்கை – முல்­லைத்­தீவு கடற்­க­ரையில் கரை ஒதுங்­கிய அக­தி­களை மீண்டும் மியன்மார் நாட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவுள்ள­வ­தாக தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பாது­காப்பு அமைச்சர் தெரி­வித்­தி­ருந்­தமை மனி­தா­பி­மா­ன­மாக சிந்­திக்­கின்ற அனை­வ­ரையும் கவ­லைக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. நீதி நியா­யங்­களை பேசு­கின்ற ஒரு அர­சாங்கம் இவ்­வாறு உயி­ருக்கு பயந்து தஞ்சம் புகுந்த அக­தி­களை அதே அர­சாங்­கத்­திடம் மீண்டும் ஒப்­ப­டைப்­பது மனி­தா­பி­மா­ன­மற்ற செயல் என பல்­வேறு தரப்­பினர்களும்…