பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இடமாற்றம்
தவுலகல பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவில், மேலதிக வகுப்புக்காக சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்ட பாடசாலை மாணவி விவகாரத்தில், உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில், பொலிஸ் கடமைகளை நிறைவேற்றாமை தொடர்பில் அவரை இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.