புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

இலங்­கையின் ஆரம்­ப­கால மத்­ர­ஸாக்­களுள் ஒன்­றான புத்­தளம் காஸி­மிய்யா அறபுக் கல்­லூ­ரியில் மூன்று தசாப்த காலங்­க­ளுக்கும் மேலாக அதி­ப­ராகப் பணி­யாற்­றிய அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்­தி­ய­சாலையில் கால­மானார். அடுத்­தநாள் புத்­தளம் பகா மஸ்ஜித் மைய­வா­டியில் இடம்­பெற்ற ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் நாடெங்­கி­லு­மி­ருந்து பெருந்­தொ­கை­யானோர் கலந்­து­கொண்­டனர்.

மர்ஹூம் டாக்டர் லாஹிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்­கையில் நவீன இரு­தய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்­றிய அளப்­ப­ரிய சேவைக்­காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி ­வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பத்­த­ர­முல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கிய இலங்கை இரு­தய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் சங்­கத்தின் புல­மைத்­துவ அமர்வின் போது(Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்­சக்­கா­ர­வினால் இந்த அதி உயர் விருது அவ­ருக்­காக வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை: அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு; விசாரணைகள் தொடர்கின்றன‌

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும்

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.