ஜனாதிபதித் தேர்தல் குறித்த சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு
இலங்கையின் வரலாறு நெடுகிலும் இந்நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகளும், அவற்றிலிருந்து பிரிந்துபோன கட்சிகளும், பல்வகை மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக நடாத்தாமல் முரண்பாடுகளையும் யுத்தங்களையும் உருவாக்கி, தங்கள் அரசியல் லாபங்களை அடைந்துகொண்டதுடன், அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்தும், தமது நிர்வாகத் திறனின்மை குறித்தும், ஊழல்கள் குறித்தும் வரலாறு நெடுகிலும் மக்களின் கவனத்தை மிகவும் லாவகமாக திசைதிருப்பி வந்துள்ளன.