470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் காஸாவில் 470 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.