கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை இம்மாகாணத்தில் சற்று குறைவடைந்திருந்த போதிலும் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.