“உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்”…..
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து அவமானப்பட்டதோடு அப்பாவி முஸ்லிம் சமூகம் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு கேள்விக்குட்படுத்தப்பட்டது. அப்பாவி முஸ்லிம்கள் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்பட்டார்கள். முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியும் விரிசலும் இதன்மூலம் உருவாகியது.