பின்கதவால் அன்றி மக்களாணையுடனேயே ஆட்சியமைப்போம்
மக்களிடத்தில் பிரிவினைவாதம் இல்லை. முரண்பாடுகள் இல்லை. ஆனால் தேர்தல் அண்மிக்கும் போது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. நம்பிக்கையின்மை கட்டியெழுப்பப்படுகிறது. பிரிவினைவாத அணுகுமுறை, சிந்தனை, எண்ணங்கள் காரணமாக கடந்த காலங்களில் நாம் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். அதுவே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மார்கார் தெரிவித்தார்.