உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான உண்மைகளையும் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்
தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிரதானமாக பேசப்பட்டது. இந்த தாக்குதலால் அரசியல் மாற்றம் மாத்திரமல்ல, சமூக கட்டமைப்பிலும், இனங்களுக்கிடையிலான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார். ஆகவே குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.