அராஜக நிலை ஏற்படாமல் நாட்டை முன்னேற்றுவோம்
சட்டம் சீர்குலைந்துள்ள நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எமது அரசாங்கத்தில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம். அதேபோன்று எதிர்காலத்தில் எந்தவித அராஜக நிலையும் ஏற்படாமல் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.