இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனை முன்வைக்க தீர்மானம்
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் செய்துள்ள மேன் முறையீட்டு மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
ஞானசார தேரர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ஞானசார தேரர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி…