இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனை முன்வைக்க தீர்மானம்

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கு எதி­ராக அவர் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனு தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்ளார். ஞான­சார தேரர் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி…

சிறுவன் ஹம்தியின் மரணம் கொலையா? 25 இல் தீர்ப்பு

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் கொலையா?, குற்றம் ஒன்றின் பிரதிபலனா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (11) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

அளுத்கம, பேருவளை வன்முறைகள் குறித்த 5 மனுக்கள்: விசாரணைகள் நிறைவு

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதன்­படி, மனு தொடர்பில் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­க­ளுக்கு நான்கு வாரங்கள் கால அவ­காசம் வழங்­கி­யுள்ள உயர் நீதி­மன்றம், அதன் பின்னர் தீர்ப்பு அறி­விப்­ப­தாக குறிப்­பிட்டு, தீர்ப்­புக்­காக மனுவை திக­தி­யின்றி ஒத்தி வைத்­துள்­ளது.

மின்சார தடையின் உண்மையான பின்னணி கண்டறியப்படுமா?

இந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கை இடம்பிடித்தமை பெரும்சாதனை ஒன்றுக்காக அல்ல. மாறாக நாடு முழுவதும் மின் தடை ஏற்படுவதற்கு குரங்கு ஒன்று காரணமாகியது என்பதனாலேயே ஆகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் இந்தக் காரணத்தை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.