ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதை தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி தனிநபர் பிரேரணையை முன்வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.