பிரதமர், அமைச்சரவை தொடர்வது நீதிமன்றை அவமதிப்பதாக அமையும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு குறித்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனக ஈஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்தப் பதவிகளை இனிமேலும் தொடர்ந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்…