நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றிருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும் நிலையில், அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்.
இது தொடர்பில் சமூகத்தின் சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து, பொருத்தமான புதிய இளம் துடிப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்தலில் களம் இறக்க பொறிமுறை ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பெரும்பாலானோர் மீது இச் சட்டமானது தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.