பிரதமர் பதவி வகிப்பதை தடுக்கக் கோரும் மஹிந்தவுக்கு எதிரான மனு வெள்ளியன்று விசாரணை
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிக்க முடியாதென அறிவிக்கும் நீதிப் பேராணையொன்றினை விடுக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை மனுமீது பூர்வாங்க விசாரணைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திகதி குறித்தது.
அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் டிசம்பர் 3 ஆம் திகதி திங்களன்றும் இந்த 'கோ வொறண்டோ' நீதிப் பேராணை...