அமர்வுகளை புறக்கணித்த ஆளும் தரப்பு எம்.பி.க்கள்
ஆளும் கட்சியாக ஜனாதிபதியால் கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நேற்றைய தினமும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தனர்.
அத்துடன், நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற்ற சபை அமர்வுகள் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய இடம்பெறவில்லையென ஆளும் கட்சியினர் கூறியுள்ளதுடன், அன்றைய தினங்களின் பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையினை நீக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.