ஈராக் – ஈரான் எல்லையில் நிலநடுக்கம் 700 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈராக் -– ஈரான் எல்லையில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஈராக் – ஈரான் எல்லையில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தை மையமாக வைத்து திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் பல சேதமடைந்தன. 713 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை…