ஈராக் – ஈரான் எல்­லையில் நில­ந­டுக்கம் 700 இற்கும் மேற்­பட்டோர் படு­காயம்

ஈராக் -– ஈரான் எல்­லையில்  திங்­கட்­கி­ழமை ஏற்­பட்ட சக்தி வாய்ந்த நில­ந­டுக்­கத்தில் சிக்கி இது­வரை 700 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நா­டு­களின் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. இது குறித்து ஊட­கங்கள் தரப்பில், ''ஈராக் – ஈரான் எல்­லையில் உள்ள கெர்­மன்ஷா மாகா­ணத்தை மைய­மாக வைத்து திங்­கட்­கி­ழமை சக்தி வாய்ந்த நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது. இந்த நில­ந­டுக்கம் ரிச்டர் அள­வு­கோலில் 6.3 ஆக பதி­வா­கி­யது. இந்த நில நடுக்­கத்தில் வீடுகள் பல சேத­ம­டைந்­தன. 713 பேர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் உள்­ளனர். அவர்­களில் சிலரின் நிலைமை…

பிரதமரின் செலவினங்களை கட்டுப்படுத்தும் சட்டம: 129 உறுப்பினர்கள் இன்று ஆதரவளிப்பர்

சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டு வரும் பிரதமரின் வீண் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும். இந்தப் பிரரேரணைக்கு ஆதரவாக 129 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பரென  பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், ஜனாநாயகத்துக்கு மதிப்பளித்து மஹிந்த தரப்பினர் இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு, போலி அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்ட்த்தின் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று அவர் சவால் விடுத்தார். அலரிமாளிகையில்…

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரவீந்திரவுக்கு விளக்கமறியல்

வெள்ளை வேனில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை பிரதான நீதிவான் ரங்க திசாநாயக்க நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் சி.ஐ.டி. அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்னவை கைதுசெய்ய முயற்சித்து வந்த நிலையில் நேற்று முற்பகல் கோட்டை நீதிமன்றில் அவர் சரணடைந்தார். இதனையடுத்து…

தாங்க முடியா கடன் சுமை

கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில்  வரவு செலவுத் திட்ட முன் மொழி­வுகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, இலங்கை எதிர்­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்கு  மீள் செலுத்­த­வேண்­டிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக இருப்­ப­தாக நிதி அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்­டிய மூல­தனக் கடன்கள் குறை­வா­கவே காணப்­பட்­டன. ஏனெனில், இவ்­வ­ருடம் இலங்­கைக்­கான 2.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான  அபி­வி­ருத்திக் கடன் முறிகள் முதிர்ச்­சி­ய­டை­கின்­றன. இதை­வி­டவும் பெறப்­பட்ட கடன்­க­ளுக்­கான வட்­டியும் 600…