வவுணதீவு பொலிஸார் படுகொலையின் பின்னணியில் ‘தேசத்தின் வேர்கள்’ அமைப்பு
எம்.எப்.எம். பஸீர்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு அம்மாள் வீதியைச் சேர்ந்த 'தேசத்தின் வேர்கள்' எனும் அமைப்பின் தலைவர் என கருதப்படும் கணேசன் பிரபாகரன் எனும் நபரை தேடி சீ.ஐ.டி.யினரும் உளவுத்துறையினரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட புலிகளின் அஜந்தன் படைப்பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தரான ஜயந்தன் என்பவரிடமிருந்து…