நாட்டில் அரசாங்கம் இல்லை; நான் மட்டுமே அதிகாரத்தில் அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது என்கிறார் ஜனாதிபதி
நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, ஜனாதிபதி நான் மட்டுமே அதிகாரத்தில் உள்ளேன். அடுத்த 24 மணி நேரத்தில் எனக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கத்தை அமைத்துவிட்டு உடனடியாக பாதுகாப்பு சபையை கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வு பெற்றுத் தருகின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான…